×

நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ”நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என்று தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு “நிறுவனங்களின் நாயகர் கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இன்று (25.11.2023) தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாக திகழ பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, சிறப்பாக நடைபெற காரணமாக விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை அறிந்து கொள்ள உதவும் இந்த புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என தலைமைச் செயலாளர் திரு.சிவ தாஸ் மீனா.இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்

The post நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Kalaivanar Stadium ,Chief Secretary ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை